சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2024 04:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் சுருட்டுப்பள்ளி கிராமத்தில், வீற்றிருக்கும் ஸ்ரீ சர்வ மங்கலா சமேத பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில், மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை நந்தி மண்டபம் அருகில் நந்தீஸ்வரருக்கு திரயோதசி பிரதோஷ பூஜைகளை பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. கோயில் செயல் அலுவலர் ராமச்சந்திரா ரெட்டி தலைமையில் கோயிலின் பிரதான அர்ச்சகரான கார்த்திகேயன், சங்கர் சர்மா குழுவினர் பக்தர்களின் சிவ நாம முழக்கங்களுக்கு இடையே பால், தயிர், நெய், இளநீர், தேன், விபூதி சந்தனம் போன்ற பூஜை வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்தனர் . தொடர்ந்து (பள்ளிக்கொன்டேஸ்வரர்) சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதோடு மரகதாம்பிகை வால்மீகேஸ்வர ஸ்வாமி மற்றும் நந்தீஸ்வரருக்கும் ஏக காலத்தில் பிரதோஷ வழிபாடு வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திரயோதசி பூஜையில் கோயில் வளாகத்தில் உள்ள மரகதாம்பிகை வால்மீகேஸ்வர சுவாமி உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீ காளஹஸ்தி டிவிஷ்னல் பஞ்சாயத்து அதிகாரி பிரபு ரெட்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . பூஜையில் ஈடுபட்டப் பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த உற்சவத்தில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.