Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ... காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் வரும் 21ல் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக., 23ல் தேனி கண்ணாத்தாள் கோயில் கும்பாபிஷேகம்; அம்மனுக்கு ஜலவாச பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
ஆக., 23ல் தேனி கண்ணாத்தாள் கோயில் கும்பாபிஷேகம்; அம்மனுக்கு ஜலவாச பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2024
11:07

தேனி; தேனி கண்ணாத்தாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கர்ப்ப கிரஹத்தில் அம்மன் திருவுருவ சிலை, பிரகார தெய்வ திருவுருவ சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, 16 நாள் ஜலவாச பூஜை துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் பெற்றனர். இக்கோயிலில் நிர்வாகிகள் 6 மாதங்களுக்கு முன் அம்மன் சிலை புதிதாக செய்து பிரதிஷ்டை செய்ய பூக்கட்டி உத்தரவு பெற்றனர். அதன் பின் புனரமைக்கும் திருப்பணிகள் துவங்கின. ஆக., 23ல் கர்ப்ப கிரஹத்தில் அம்மன் சிலையும், கோயில் வளாகத்தில் பரிவார சக்தி சிலைகளும், சிம்ம வாகனம், பலிபீடம். சரஸ்வதி, சக்தி விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாச ஸ்தபதி மூலம் முக்கால் அடி உயரத்தில் கண்ணாத்தாள் திருவுருவ சிலை, பிற பரிவார சுவாமி சிலைகள் தயாரிக்கப்பட்டன. அவை விருதுநகர் மாவட்டத்தில் இருந்து நடராஜர் சிவாச்சாரியார் பூஜை செய்து தேனி நகரில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின் அம்மன் சிலை உட்பட அனைத்து சிலைகளும் முதல் 16 நாட்களுக்கு ஜலவாசம், அடுத்த 16 நாட்கள் தான்யாவாசம் பூஜைகள் முடிந்து, அதற்கடுத்த 16 நாட்கள் தர்ப்பப்பைவாசம் பூஜைகள் முடிந்தவுடன் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கண்ணாத்தாள் கோயில் திருப்பணிக் குழுவின் தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் தர்மகிருஷ்ணராஜா, செயல் தலைவர் மலைச்சாமி, செயலாளர் ஈஸ்வரன், திருப்பணி ஆலோசகர் ஸ்தபதி ஜெயச்சந்திரன், ஆலோசகர் சிங்காரவேலு ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar