விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2024 05:07
விழுப்புரம்; விழுப்புரம் கைலாசநாதர் கோவில் நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடராஜருக்கு 6 முறை திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று ஆனி திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. காலை 9:30 மணிக்கு நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பகல் 11:30 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து மகா தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.