ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளலும், இரவு 6:00 மணிக்கு மேல் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் இன்று பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு அவதார தலமான நந்தவனத்தில் ஆண்டுக்கு ஒரு முறை எழுந்தருளும் பெரியாழ்வார் ஆண்டாளுடன் எழுந்தருளிய அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜூலை 14ல் செப்புத் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.