திருச்சி; லால்குடி அருகே கல்லகம் கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 8ம் தேதி முதல் யாக பூஜைகள் நடந்தன. யாக பூஜைகள் நிறைவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கோயில் கோபுரத்திற்கு புனித நீர் ஊட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.