காரைக்கால் கோதண்டராமர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2024 03:07
காரைக்கால், காரைக்காலில் கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அமைச்சர் திருமுருகன் தலைமையில் நடந்தது.
காரைக்கால் கோவில்பத்து திருத்தெளிச்சேரி ஸ்ரீசுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று கோவில் வளாகத்தில் அமைச்சர் திருமுருகன் தலைமையில் பலவகையான திரவங்களால் பந்தக்காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவிலை சுற்றிவந்த பந்தக்காலை நடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோயில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,கோவில் பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.