பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
03:07
உடுமலை; உடுமலை ராமய்யர் கல்யாண மண்டபத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், 77வது ஆண்டு ஆடி மாத ஆன்மிக உபன்யாஸ நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. இதில், ஸ்ரீ வராஹரின் சங்கல்பம், ஸ்ரீ ராமரின் விரதம், ஸ்ரீ கிருஷ்ணரின் உறுதி உள்ளிட்ட தலைப்புகளில், வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். ஸ்ரீ கிருஷ்ணரின் உறுதி என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஸ்ரீ கிருஷ்ணர், அர்ச்சுனனிடம், இறைவன் என்னை தஞ்சமாக கொள்; என்னை மட்டுமே தஞ்சமாக கொள்,’’ என உறுதியாக தெரிவிக்கிறார். இதனால், அர்ச்சுனன் சஞ்சலங்கள் நீங்க பெற்றார். தியாகம் என்றால் விடுதல் எனவும், பரிதியாகம் நன்கு விடுதல் எனவும் பொருள் கொள்ள வேண்டும். எனவே, கவலைகளை விட்டு விட்டு, பகவான் ‘எனது திருவடிகளை உபாயமாக பற்றிக்கொள்ளுங்கள்; பாவங்களில் இருந்து உங்களை விடுவிக்கிறேன்,’ என நமக்கு வழிகாட்டுகிறார். இவ்வாறு, பேசினார்.