Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை கடைமுக தீர்த்தவாரி: ... கோயில்கள் பாதுகாப்பில் அக்கறை வேண்டும்: அறநிலைய துறை! கோயில்கள் பாதுகாப்பில் அக்கறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமியே சரணம் ஐயப்பா: சபரிமலையில் மண்டல பூஜைகள் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 நவ
2012
10:11

கார்த்திகை பிறந்துவிட்டால் "சுவாமியே சரணம் ஐயப்பா! என்ற பக்திகோஷம் எங்கும் கேட்கத் தொடங்கிவிடும். கார்த்திகை முதல்நாளில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து மண்டல விரதம் தொடங்குவர். 41நாட்கள் விரதமிருந்து யாத்திரை மேற்கொள்வர். பனிக்காலமான இப்பருவத்தில் குளிர்ந்த நீரில் நீராடி, பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளும் போது உடல்வலிமை பெறுகிறது. விரதகாலத்தில் கருப்பு, காவி ஆடைகளை உடுத்தி எளிமை யையும், சமத்துவத்தையும் பின்பற்றுவர். மலை, ஆறு, காடு என்று இயற்கையோடு இணைந்து, உடல்ரீதியாகப் புத்துணர்வும் பெறுவர். ஹரிஹரபுத்திரனான ஐயப்பன் புலிப்பாலுக்காக காட்டுக்குச் சென்று மஹிஷி என்னும் அரக்கியை வதம் செய்தார். அவதார நோக்கம் நிறைவேறிய பின், சபரிமலையில் கோயில் கொண்டார். அவரைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் உடலாலும், உள்ளத்தாலும் தூய்மை பெற்று வாழ்வில் சிறந்து விளங்குவர்.

கார்த்திகையில் கொண்டாடப்படுவது திருக்கார்த்திகை தீபத்திருவிழா. இந்த ஆண்டு நவ.27ல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இந்த விழா நடக்கிறது. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், சிவனருள் வேண்ட சோமவார விரதம் மேற்கொள்வர். சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து சோமன் என்னும் பெயரும், சிவனின் தலையில் இருக்கும் பாக்கியமும் பெற்றான். இந்த விரதம் இருப்போர் திங்கட்கிழமை அதிகாலையில் நீராடி, சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வர். அந்தண தம்பதியரை வீட்டுக்கு அழைத்து சிவபார்வதியாக பாவித்து வழிபாடு நடத்துவர். அவர்களுக்கு உணவளித்த பின் உண்பர். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்துவது வழக்கம். 108 அல்லது 1008 சங்குகளை சிவலிங்கம் போல அடுக்கி வைத்து இதனைச் செய்வர். சங்காபிஷேகம் செய்தால் நாட்டில் சுபிட்சம் உண்டாகும். புதுமணத்தம்பதிகள் இந்நாளில் சுவாமி தரிசனம் செய்தால், காலமெல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; தமிழகம் வந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar