திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 06:07
துாத்துக்குடி; திருச்செந்துார் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், 192வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர், பல வாகனங்களில் உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிழ்ச்சியான 11ம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. பின், உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடந்தது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி நடந்தது. தேரில் அமர்ந்த அய்யா வைகுண்டரை, திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர், வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்தார்.