குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2012 10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுப்பிரமணியசுவாமி "வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று(நவ., 17) நடக்கிறது.கோயிலில் சஷ்டி விழாவை முன்னிட்டு நாளை(நவ., 18) நடக்கும் சூரசம்ஹாரலீலை நிகழ்ச்சிக்காக, இன்று மாலை 6.30 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருள்வார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பகவிநாயகர், துர்க்கைஅம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்படும்.அம்பாள் கரத்திலுள்ள நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு, நந்தியை வலம்சென்று கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்யப்படும். தீபாராதனைகள் முடிந்து சுவாமி பூ சப்பரத்தில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பார்.