பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 19ம் தேதி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2012 10:11
திருநெல்வேலி: எட்டயபுரம் நடுவிற்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 19ம் தேதி திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் கந்த சஷ்டி திருவிழா திருக்காப்பு முடித்தலுடன் துவங்கியது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. விழா நாட்களில் இரவில் அபிஷேக ஆராதனை நடக்கிறது.19ம் மாலை 6 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம், விசேஷ அபிஷேக ஆராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை எட்டயபுரம் நடுவிற்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முருக பக்தர்கள் மற்றும் கோயில் பூசாரி ராஜ்குமார் செய்துள்ளனர்.