Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல் மண்டபத்துடன் ஆற்றில் புதைந்த ... பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்தி விழா; ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவக்கம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2024
11:08

சென்னை, புறநகர் கிருஷ்ணர் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ணரின் அவதார திருநாள். நாடு முழுதும் இந்நாள், ஹிந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சிலர் நட்சத்திரம், திதி பார்த்து கொண்டாடுவதால், இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை, நேற்று பெரும்பாலானோர் கொண்டாடினர். வடமாநிலத்தவர்கள் ஜென்மாஷ்டமியாக கொண்டாடினர். வைணவர்கள் ஸ்ரீ ஜெயந்தியாக கோகுலாஷ்டமியை கொண்டாடுவர். இதன்படி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இஸ்கான் கோவிலில் கவர்னர்; சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், மூன்று நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின் பிரதான நாளான நேற்று, முக்கிய நிகழ்வாக மஹா அபிஷேகம், ஆரத்தி நடைபெற்றது. திருக்கோலத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பகவானை, பக்தர்கள் ஆராதித்தனர். கீர்த்தனைகள் பாடப்பட்டன. பக்தர்கள் பல்வேறு ஆன்மிகப் பொருட்கள், புனித நுால்கள் அடங்கிய பல கண்காட்சி அரங்குகளை அமைத்திருத்தனர். விழாவில், தமிழக கவர்னர் ரவி, தன் குடும்பத்துடன் பங்கேற்று, கிருஷ்ண பகவானுக்கு ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். அவருக்கு இஸ்கான் கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.


கிருஷ்ணர் கோவில்கள்


கோபாலபுரத்தில் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி கோவில், கவுடியா மடம், மயிலாப்பூர், நந்தலாலா, கோட்டூர்புரம், சாஸ்திரிநகர் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடந்தன. சென்னை நகரில் பல வீடுகளில், வீதி முதல் பூஜை அறை வரை, கிருஷ்ணர் கால் பாதம் வைத்து அலங்கரித்தனர். மாலையில் சீடை, அவல், நாவல் உள்ளிட்ட கனி வகைகள், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணெய், பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றை படைத்து வழிபாடு செய்து, அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர். இன்று, அமிர்தம் கடைதல், குசேலர் வைபவம், உறியடி உற்சவம் நடக்கிறது. வைணவ சம்பிராயத்தினர் இன்று, ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடுகின்றனர். –நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் ... மேலும்
 
temple news
மார்கழி மாதம் புனிதமானது. மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar