Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா ... காலபைரவர் கோவிலில் நடந்த அஷ்டமி பூஜை; கருவறைக்கு வந்த 2 நாய்கள்.. பக்தர்கள் பரவசம் காலபைரவர் கோவிலில் நடந்த அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்தி விழா; ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்தி விழா; ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2024
11:08

பிள்ளையார்பட்டி; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


நகரத்தார் கோயிலான இங்கு விநாயகர் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள்நடைபெறும். விநாயகர்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடத்தப்படுவது சிறப்பு. இத்திருவிழாவை முன்னிட்டு தற்போது வெள்ளிக்கேடகம், தேர்களின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. கோயிலில்மின் விளக்கு அலங்காரப் பணி நடைபெறுகிறது. கோயிலில் ஆக.28ல் பூர்வாங்க பூஜைகள் நடக்கின்றன. ஆக. 29 காலையில் உற்ஸவர் கொடிமரம் எழுந்தருளி சிறப்பு பூஜை நடந்து கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இரவில் மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வருவார். மறுநாள் முதல் எட்டாம் திருநாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடு நடைபெறும். தினசரி இரவில் சிம்மம்,பூதம், கமலம், ரிஷபம், யானை, மயில், குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். ஆறாம் திருநாளான செப்.3 மாலை கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறும். செப்.6 மாலையில் தேரோட்டமும், மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தலும் நடைபெறும். செப்.7 விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி, மதியம் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடையும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்ப செட்டியார், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செட்டியார் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar