Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாண்டவர்கள் வழிபட்ட கோவில்: நவம்பர் ... ஸ்ரீரங்கம் கோவிலில் கைசிக ஏகாதசி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2012
11:11

ராசிபுரம்: கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா, ராசிபுரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேவர்களை சிறை பிடித்த அசுரர்களை முருகன் வதம் செய்து, தேவர்களை விடுவித்த நிகழ்ச்சியே சூரசம்ஹாரம். கந்தசஷ்டி அன்று அனைத்து முருகன் கோவில்களிலும், இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. ராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில், முருகன் ஸ்வாமி தெற்கு நோக்கி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, சுப்ரமணியர் ஸ்வாமி மற்றும் ஆறுமுக ஸ்வாமிக்கு கந்தசஷ்டி விழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது. அதை தொடர்ந்து, விரதம் இருப்பவர்களுக்கு விரத காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி வரை, ஸ்வாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. காலை, 7 மணிக்கு வேல் வாங்கப்பட்டு தர்மசம்வர்த்தினி அம்பாளிடம் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்தவேல் சுப்ரமணியர் ஸ்வாமி சன்னதியில் வைக்கப்பட்டது. 6.30 மணிக்கு மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்ரமணிய ஸ்வாமி ஒரு சப்பரத்திலும், மற்றொரு சப்பரத்தில் சூரபத்மனும் எதிர் எதிரே வந்தனர். அப்போது, அம்பாள் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட வேலால் சூரபத்மன், சிங்க மகாசூரன், கஜாமுகசூரன், தாராகசூரன் ஆகிய நான்கு சூரர்களையும், பழைய பஸ் ஸ்டாண்ட், கதர்கடை, ஆத்தூர் சாலை மற்றும் நாமக்கல் சாலை பிரிவு ஆகிய பகுதிகளில் வைத்து வதம் செய்து தலையை கொய்தனர். அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். இன்று (நவ., 19) காலை, 10 மணிக்கு முருகனுக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே தேர் திருவிழாவின் போது, அச்சு முறிந்ததால், சுவாமியுடன் தேர் சாய்ந்து ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar