பதிவு செய்த நாள்
04
செப்
2024
05:09
சிவகங்கை, சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை 9:45 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. ஹிந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில், புனரமைக்கும் பணி நடைபெற்று, இன்று காலை 9:45 மணிக்கு அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜை தொடங்கின. மாலை 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பண பூஜைகள் நடந்தது. நாளை காலை 7:35 மணிக்கு புனித தீர்த்தங்களை ஊர்வலமாக எடுத்து வருதல், மாலை 4:15 மணிக்கு கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், கடஸ்தாபனம், முதல் கால வேள்வி நடைபெறும். செப்., 6 நாளை காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கும். மங்கள இசை, திருமுறை பாராயணங்கள் நடைபெறும். மதியம் 12:05 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, இரவு 8:15 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். செப்., 7 அன்று காலை 8:35 மணிக்கு நான்காம் கால வேள்வி, காலை 11:45 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜை நடைபெறும். செப்., 8 ம் தேதி காலை 6:15 மணிக்கு ஆறாம் கால வேள்வி, மங்கள இசை, மண்டப சாந்தி, கோபூஜையுடன் கும்பாபிேஷக பூஜை தொடர்ந்து நடைபெறும். காலை 10:45 மணி முதல் 11:45 மணிக்குள் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க உள்ளனர். அன்று மாலை 6:15 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வெட்டுடையார் காளி திருவீதி உலா வருவார். ஹிந்து அறநிலையத்துறை தக்கார் ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி உட்பட ஊழியர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.