Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெகமம் காலபைரவர், நவகிரகங்களுக்கு ... ஓணத்திற்கு பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் வடக்கு நாதர் கோவிலில் அசத்தல் ஓணத்திற்கு பிரம்மாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
 பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 செப்
2024
06:09

திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சதுர்த்தி விழாவில் கற்பகவிநாயகர் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தையும், மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தையும் தரிசித்தனர். நாளை காலை சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். இக்கோயிலில் பத்து நாள் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. இன்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு கற்பகவிநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:50 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. 


பெண்கள்,சிறுவர்,சிறுமியர் உற்சாகமாக சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்தனர். தேர்கள் கோயிலை வலம் வந்தன. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். நீண்ட வரிசையில் நின்று சுவாமி அலங்காரத்தை பக்தர்கள் தரிசித்தனர்.நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை நடை திறந்து, பக்தர்கள் தரிசனம் துவங்குகிறது. கோயிலிலிருந்து காலை 9:30 மணி அளவில் உற்ஸவ விநாயகர்,ச ண்டிகேஸ்வரர் கோயில் தெற்கு படித்துறையில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து அங்குசத்தேவருக்கு படித்துறையில் அபிேஷக,ஆராதனைகள் நடந்து தீர்த்தவாரி நடைபெறும். மதியம் 1:30 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவு 11:00 மண அளவில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar