Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அற்புத பலன்கள் தரும் எளிய கணபதி ... சுந்தராபுரம் கம்பீர விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு சுந்தராபுரம் கம்பீர விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் மெகா ‛திருமுக்குறுணி மோதகம்’ படைத்து சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் மெகா ‛திருமுக்குறுணி மோதகம்’ படைத்து சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

07 செப்
2024
05:09

திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தவாரி நடந்தது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நகரத்தார் குடவரைக்கோயிலான இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆக., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. ஆறாம் நாளில் கஜமுகசூரசம்ஹாரமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது. இன்று காலை 9:50 மணிக்கு மூலவர் பிரதிநிதியாக அங்குசத்தேவர், தங்க மூஷிக வாகனத்தில் உற்ஸவ விநாயகர், சண்டிகேஸ்வரர் வெள்ளிக்கேடகத்தில் புறப்பாடு துவங்கியது. கோயிலை வலம் வந்து திருக்குளத்தின் தெற்கு படித்துறையில் எழுந்தருளினர். தொடர்ந்து தலைமைக்குருக்கள் பிச்சைச்சிவாச்சார்யார், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்களால் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்ப செட்டியார், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செட்டியார் முன்னிலையில் அங்குசத்தேவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சோமசுந்தரகுருக்களால் குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. பின் சுவாமி திருவீதி வலம் வந்து கோயிலில் சேர்க்கை ஆனது. மதியம் 1:20 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம் நடந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். அடுத்து 18 படி அரிசியிலான ‛மெகா’ கொழுக்கட்டையான ‛திருமுக்குறுணி மோதகம்’ மூலவருக்கு படையிலிடப்பட்டது. முன்னதாக அதிகாலை நடை திறந்து தரிசனம் துவங்கியது. மதியம் 2:00 மணி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வாகனங்களில் திருவீதி வலம் வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆவணி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar