Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் வந்தல்லோ... திருவோணம் ... திருவள்ளூர் திருக்கண்டீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷகேம் திருவள்ளூர் திருக்கண்டீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சுற்றுபகுதியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
மதுரை சுற்றுபகுதியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 செப்
2024
05:09

பாலமேடு; பாலமேடு அருகே மறவர்பட்டி அருந்ததியர் காலனியில் சித்தி விநாயகர், உச்சி மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை சிறப்பு யாக பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, அம்மன் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.

பேரையூர்: மேலப்பரங்கிரி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நவகிரக யாகம், லட்சுமி யாகம் நடத்தப்பட்டு மகாதீப நிகழ்ச்சி, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், பிரசன்ன கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூரண குதி தீபாரணை நடந்தது. நேற்று காலை 7:35 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்து. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தான்: தென்கரையில் அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.,10ல் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கின.13ல் பூஜை,கோ, பூர்ணாஹூதி முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 4ம் கால யாகபூஜையை தொடர்ந்து பட்டர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க அம்மன், சுவாமி,பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவர், ஹிந்து சமய அறநிலையத்துறையினர், ஊழியர்கள் செய்தனர்.

மேலக்கால் அருகே தாராப்பட்டியில் கொடிப்புலி முத்தையா சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று சிறப்பு யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை வெயிலான் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜ சுவாமிக்கு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளியம்பலத்தில் ஆருத்ரா தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar