Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சந்தாங்கி முத்துமாரியம்மன் ... பிரபஞ்ச சிற்பி.. விஸ்வகர்மா ஜெயந்தி விழா; ஏகாம்பர சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு பிரபஞ்ச சிற்பி.. விஸ்வகர்மா ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 செப்
2024
12:09

திருப்பூர்; ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று, விமரிசையாக நடந்தது.


ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி டிரஸ்ட் சார்பில், திருப்பூர், ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனில், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீராஜமாதங்கி, ஸ்ரீமஹா வாராஹி, ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் ஸ்ரீபைரவர் சன்னதிகள் எழிலான தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சன்னிதானம், ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி கோவில், ஸ்ரீகைலாச ஆஸ்ரம மகாஸமஸ்தான பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர புரி மஹாசுவாமிகளின் அனுகிரகத்துடன் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கடந்த 6ம் தேதி கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக விழா பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஆறாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை, 7:05 மணிக்கு, விமான கலசங்களுக்கு கும்பாபி ேஷகமும், காலை, 7:20 மணிக்கு, மூலாலய மூர்த்திகள் கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா அபிேஷகம், தீபாராதனை நடந்தது.


வேலுார் மாவட்ட முன்னாள் கலெக்டர் ராஜேந்திரனின் ஆன்மிக ஆலோசனையுடன், சபேச சிவாச்சார்யார் சுவாமிகள் தலைமையிலான குழுவினர், கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ரத்தினகிரி முருகனடிமை சுவாமிகள், சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், வேலுார் கலவை சிவயோகி சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீமஹா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவில் ஸ்ரீசுவாமிஜி, செஞ்சேரி ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், அவிநாசி காமாட்சிதாச சுவாமிகள், திருப்பூர் ஸ்ரீசாரதா சத்சங்கம் சுவாமினி ஸ்ரீமஹாத்மானந்த சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று அருளாசி வழங்கினர். அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், டிரஸ்ட் தலைவர் ஞானகுரு குடும்பத்தினர், ஆடிட்டர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும், 48 நாட்களுக்கு, மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஆராதனை விழா நடந்தது. உடுமலை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar