சிவகங்கை; சிவகங்கை மஜீத் ரோடு சனீஸ்வரன் கோயிலில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா நடைபெற்றது. இக்கோயில் வளாகத்தில் விஸ்வ பிரம்மா கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜெயந்தி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழா ஏற்பாட்டை டிரஸ்ட் தலைவர் எம்.முத்துராமலிங்கம், செயலாளர் எஸ்.கோபிநாத், பொருளாளர் எம்.ராமசந்திரன் செய்திருந்தனர். ஜெயந்தி விழாவில் ஒருங்கிணைப்பாளர் கோபாலாச்சாரி, முத்துக்குமரன், சிவகங்கை விஸ்வகர்ம சமூக சங்க செயலாளர் டி.செல்வராஜ், பொருளாளர் பி.பழனி, நிர்வாகி இளங்கோ, பா.கணேசன், க.மதிவாணன், ராதாகிருஷ்ணன், க.மகேஸ்வரன், பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.