Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமேஸ்வரர் பாதங்களை தழுவி சென்ற ... மேதலோடை பதினாறு பிள்ளை காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா மேதலோடை பதினாறு பிள்ளை காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் ரூ.48 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் ரூ.48 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு

பதிவு செய்த நாள்

15 அக்
2024
01:10

சென்னை; திருச்செந்துாரில், 48 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 48.3 கோடி ரூபாயில், புதிதாக பக்தர்கள் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும், 10 கோடி ரூபாயில் முடி காணிக்கை மண்டபம்; ஆறு கோடி ரூபாயில் சுகாதார வளாகங்கள்; 4 கோடி ரூபாயில், 7.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய நீர்தேக்க தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகியவையும் கட்டப்பட்டு உள்ளது. இவற்றிற்கு மொத்தமாக, 68.3 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டடங்களை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அடிக்கல்; திருசெந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோவிலில், 5.81 கோடி ரூபாயில் தெப்பகுளம் சீரமைப்பு, வேதபாடசாலை, கருணை இல்லம், புதிய அன்னதான கூடம், சரவண பொய்கையில் செயற்கை நீரூற்றுகள், அழகிய பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி, தலைமை செயலர் முருகானந்தம், அறநிலையத்துறை செயலர் சந்தரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்செந்துாரில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், துாத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், இன்று (11ம் தேதி)குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar