திண்டிவனம்; அகூர் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக சமாதான கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. அகூர் முனீஸ்வரன் கோவிலில் கும்பாபிேஷகம் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது. தொடர்ந்து கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்குள் பிரச்னை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் 20ம் தேதியும், இன்னொரு தரப்பினர் 21ம் தேதி திருவிழா நடத்துவதற்காக தனித்தனியாக ஏற்பாடுகளை செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவா தலைமையில் இரு தரப்பினர் பங்கேற்ற சமாதான கூட்டம் நடந்தது. பேச்சுவார்த்தைக்குப்பின், இரு தரப்பினரும் கலந்து பேசி, ஒரே தேதியில் திருவிழா நடத்துவதாக தாசில்தாரிடம் தெரிவித்தனர்.