பதிவு செய்த நாள்
19
அக்
2024
03:10
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, கூழமந்தலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேசும் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாதம் நிறைவு உற்சவத்தையொட்டி இன்று கோவிலில் விசேஷ அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, பித்தளை, காகித கூழ் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர், பாண்டுரங்க சுவாமி, பள்ளிகொண்ட ரங்கநாதர், கருடாழ்வார், ஹனுமன் ஆகிய ஐந்து அலங்காரத்தில் பேசும்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து அன்னதானம், கலை நிகழ்ச்சி, பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பேசும் பெருமாள் ஐந்தாவது வார சனிக்கிழமை உற்சவ நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.