குறுக்குத்துறை முருகன் கோயிலில் நவ.2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2024 10:10
திருநெல்வேலி; குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.2ம் தேதி கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது. நெல்லை டவுன் அருகேயுள்ள குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நவ. 2ம் தேதி துவங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 6 நாட்கள் தினமும் காலை யாகசாலை பூஜையுடன் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.7ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. கோயிலில் திருப்பணிகள் நடப்பதால் கோயில் மண்டபத்தின் முன் பகுதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி இரவு 7 மணிக்கு கோயில் உள் பகுதியில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதனையடுத்து 9ம் தேதி துவங்கி 3 நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. இத்தகவலை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.