நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா; செப்பு தேரில் காந்திமதி அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2024 11:10
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி அம்மன் செப்பு தேரில் வீதி உலா வந்தார்.
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழைமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில் முக்கிய நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 தினங்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருநெல்வேலி நகா் நான்கு ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது. விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி அம்மன் செப்பு தேரில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.