திருச்செந்துார் சூரசம்ஹார விழா; நவ. 7ல் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2024 11:10
துாத்துக்குடி; திருச்செந்துார், சுப்பிரமணியசுவாமி கோயில், கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழாவை ஒட்டி,நவ. 7ம் தேதி துாத்துக்குடி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் இளம் பகவத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நவ. 7ம்தேதி நடக்கிறது. இதனை ஒட்டி, 07.11.2024 துாத்துக்குடி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள், பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவாணி முறிச்சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல என்று, தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக, 14.12.2024 அன்று (2ம் சனிக் கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.