நத்தம் வடக்கு வாசல் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2024 03:10
நத்தம்; நத்தம் அருகே புதுப்பட்டியில் வடக்குவாசல் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதில் இன்று முழுவதும் யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம்,கங்கை, காவேரி,கரந்தமலை அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த புனித தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட கவுன்சிலர் சின்னாக் கவுண்டர், ஊராட்சி தலைவர் பழனியம்மாள் மகாலிங்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.