Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோற்றுக்குள் இறைவன்.. ... ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் டிச., 12ல் கும்பாபிஷேகம்; சுவாமிகளுக்கு பாலாலயம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் டிச., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வேணு கோபாலசுவாமி கோயிலில் நவ.17ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநி வேணு கோபாலசுவாமி கோயிலில் நவ.17ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 நவ
2024
12:11

பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நவ.17., ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.


பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், காந்தி ரோடு, பெரிய கடைவீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. கடந்த ஆண்டு வேணுகோபால சுவாமி கோயிலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. அதன் பின் சில மாதங்களுக்கு முன் வேணுகோபால சுவாமி கோயிலில் பாலாலய பூஜை நடைபெற்றது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த உடன் அக்.23, கருவறை பாலாலயம் நடைபெற்றது. அதன் பின் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நவ.4ல் நடைபெற்றது. 


இதனைத் தொடர்ந்து நாளை (நவ., 16) முதற்கால வேள்வி மங்கல இசையுடன், மாலை 5:00 மணிக்கு துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து குரு வணக்கம், இறைவழிபாடு, புனித நீர் வழிபாடு, காப்பு அணிவித்தல், பூமி வழிபாடு, வேள்வி சாலை புகுதல், வேள்வி வழிபாடு ஆகியவற்றுடன் முதல் கால வேள்வி நடைபெறும். அதன் பின் (நவ.,17) ஞாயிறு காலை 7:00 மணிக்கு நல் மங்கல இசை உடன் திருமகள் வழிபாடு, திருவிளக்கு ஏற்றுதல், வேண்டுதல் விண்ணப்பம், கண் திறத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் இரண்டாம் கால வேள்வி நடைபெறும். யாக சாலையில் வைக்கப்பட்ட திருக்குடங்கள் மூலம் திருச்சி திருவெள்ளறை கோபாலகிருஷ்ண பட்டர் தலைமையில், காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான விமான, கலச கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாட்டினை இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar