Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ... சபரிமலையில் பாலிதீனை தவிர்க்க தந்திரி வேண்டுகோள் சபரிமலையில் பாலிதீனை தவிர்க்க ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 18ம் படியிலிருந்து நேரடியாக பக்தர்கள் மூலவரை தரிசிக்க திட்டம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 18ம் படியிலிருந்து நேரடியாக பக்தர்கள் மூலவரை தரிசிக்க திட்டம்

பதிவு செய்த நாள்

19 நவ
2024
05:11

சபரிமலை; சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களை நேரடியாக சன்னதிக்கு அனுப்பி கூடுதல் தரிசன வசதி செய்வதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

தற்போது 18 படி ஏறி வரும் பக்தர்கள் இடது பக்கமாக திரும்பி மேம்பாலம் ஏறி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். அதிலும் நேரடியாக பார்க்காமல் வலதுபுறம் திரும்பி, சில வினாடிகள் மட்டுமே தரிசிக்க முடியும். கூட்ட நேரத்தில் போலீசார் பக்தர்களை தள்ளி விடும்போது பலருக்கு தரிசனம் கிடைக்காத சூழ்நிலையும் இருக்கிறது.

இதை தவிர்த்து மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை ஏற்று 18 படியேறி வரும் பக்தர்களை, கொடி மரத்தின் பக்கவாட்டில் நேரடியாக கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்குவாசலில் நுழைந்ததுமே மூலவர் தெரிவார். பக்தர்கள் கூடுதல் நேரம் மூலவரை தரிசிக்க முடியும். தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னதியின் பின்புறம் வழியாக உள்ள பாலத்தில் மாளிகை புறம் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து பெய்லி பாலம் வழியாக பம்பைக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு நடத்தினார். சோதனை அடிப்படையில் இந்த மாற்றத்தை அமல்படுத்தி பார்த்த பின்னர் கேரள உயர்நீதிமன்றம், அரசு, மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar