Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி பைரவருக்கு விபூதி காப்பு ... மன்னார்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு மன்னார்குடியில் சுவாமி சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா; பாடல்கள் பாடி வணங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா; பாடல்கள் பாடி வணங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 டிச
2024
12:12

சென்னை; திருவண்ணாமலை யோகி பகவான் ராம்சுரத்குமாரின், 106வது ஜெயந்தி விழாவில், எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய பாடல்களை பக்தர்கள் பாடி, பரவசத்துடன் வணங்கினர். கடந்த 1918 டிச., 1ல் பிறந்தவர் ராம் சுரத்குமார். சிறுவயதிலேயே ஆன்மிக நாட்டம் கொண்ட இவர், ஞானம் பெற்று, திருவண்ணாமலையில் துறவியாக வாழ்ந்தார்.


எளியவராக வாழ்ந்த இவரின் பார்வையிலேயே, தன் கஷ்டங்களை தொலைத்தவர்கள் ஏராளம். ‘விசிறி சாமியார்’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டார். இவரின் சீடர்களில் ஒருவரான எழுத்தாளர் பாலகுமாரன், ‘விசிறி சாமியார், பகவான்யோகி ராம்சுரத்குமார்’ போன்ற நுால்களை எழுதி உள்ளார். மேலும், அவர் அடைந்த பரவச அனுபவங்களை, பாடல்களாகவும் எழுதி உள்ளார். பகவான் யோகி ராம் சுரத்குமாரின், 106வது ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, பாலகுமாரன் இல்லத்தில், ‘அகண்ட நாமம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஜெயந்தி விழா நடந்தது. இதை, எழுத்தாளர் பாலகுமாரன் அறக்கட்டளையும், மயிலை யோகி ராம் சுரத்குமார் சத்சங்கமும் இணைந்து நடத்தின. மழையையும் பொருட்படுத்தாமல், யோகியின் பக்தர்களில், 300க்கும் மேற்பட்டோர் கூடினர். காலை, 9:00 மணிக்கே, சென்னை முனீஸ்வர சாஸ்திரிகள், யோகி ராம் சுரத்குமாரின் உருவச்சிலைக்கு ஹோமம், அபிஷேகங்களை நடத்தினார். அதைத்தொடர்ந்து, மயிலை யோகி ராம்சுரத்குமார் சத் சங்கத்தினர், வேத பாராயணம் நிகழ்ச்சியிலும், நாம சங்கீர்த்தனத்திலும் பங்கேற்றனர். அப்போது, எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய, 30க்கும் மேற்பட்ட பாடல்களை, ராகத்துடன் பாடிய அவர்கள், தங்களுக்கு யோகி ராம் சுரத்குமாருடன் ஏற்பட்ட பரவச அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாலையில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, ‘எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar