Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொங்கு நாட்டு காவல் தெய்வம்; ஆனைமலை ... மாசாணியம்மனுக்கு நள்ளிரவில் மயான பூஜை மாசாணியம்மனுக்கு நள்ளிரவில் மயான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் அருளும் மகாமுனி சுவாமி படையல் பிரசாதம்
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் அருளும் மகாமுனி சுவாமி படையல் பிரசாதம்

பதிவு செய்த நாள்

12 டிச
2024
12:12

ஆனைமலை உப்பாற்றாங்கரையில் சயன நிலையில் பக்தர்களுக்கு மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். மாசாணியம்மனின் காவல் தெய்வமாக மகாமுனி திகழ்கிறார். குண்டம் திருவிழாவின் கடைசி நிகழ்வாக, மகாமுனிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அதில், அருள் வந்த நிலையில் மகாமுனி அருளாளியை, மேள-தாளம், வாண வேடிக்கைகளுடன் தலைமை முறைதாரர், அம்மன் அருளாளிகள், முறைதாரர்கள் அழைத்து வருவர்.


அருள் வந்த நிலையில் ஆவேசமாக இருக்கும் அருளாளியை, சேலையால் கட்டி மாசாணியம்மன் கோவிலுக்கு அழைத்து வருவர். இரவு மகாமுனிக்கு புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்ற பொருட்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படும். இதையடுத்து மகாமுனி அருளாளி அருள் வந்து படையல்களை சாப்பிட்டபடியே கோவிலை சுற்றி வலம் வருவார். மகாமுனியின் படையல் பிரசாதம் கிடைத்தால் குழந்தை வரம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பல பெண்கள், தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மகாமுனியின் படையல் பிரசாதத்துக்கு காத்திருப்பர். மகாமுனியின் படையல் பிரசாதம் கிடைத்த பெண்கள் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தபடியே மகாமுனியை வணங்குவர்.மகாமுனி பூஜையை காண கோவிலில் அதிகளவு பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருப்பர். பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar