பதிவு செய்த நாள்
29
நவ
2012
10:11
திருச்செந்தூர் கோவிலுக்கு, தானமாக வழங்கப்பட்ட, பசுக்களில், 5,000 பசுக்கள் மாயமாகியுள்ளது, தணிக்கைத்துறை ஆ#வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டால், இந்த எண்ணிக்கை, 6,000 ஆக உயரும். திருச்செந்தூரில் தனியார் @காசாலைகளுக்கு வழங்கப்பட்ட, இந்த பசுக்கள் குறித்து, அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதால், அவை விற்பனை செ#யப்பட்டிருப்பதாக, புகார் எழுந்திருக்கிறது. கோவில்களுக்கு பசுக்களை தானமாக வழங்குவதை, பக்தர்கள் புனிதமானதாக கருதுகின்றனர். இவ்வாறு பக்தர்கள் வழங்கும் பசுக்கள், @காவில் நிர்வாகத்தால் அமைக்கப்படும், "@காசாலைகள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
விதிமுறைகள்: அதிக அளவில் பசு தானம் செய்யப்படும் போது, பசுக்களை பராமரிக்க தனியார் பசுச்சாலைகளுக்கு வழங்கப்படும், நடைமுறை உள்ளது. இப்பசுச்சாலைகள், விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பதிவு பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பசுக்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், செயல் அலுவலர் பெயரில், காப்பீடு செய்ய வேண்டும். அந்த பசுக்கள் இறக்குமானால், கிடைக்கும் காப்பீட்டு தொகையில், 70 சதவீதம் கோசாலைகளுக்கும், 30 சதவீதம் @காவிலுக்கும் தர வேண்டும். மாடுகள் இறப்பு குறித்து, இணை ஆணையருக்கும், செயல் அலுவலருக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள், தனியார் @காசாலைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளன.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி @காவிலில் உள்ள, @காசாலைக்கு வழங்கப்பட்ட பசுக்களில், 5,389 க்கும் மேலான பசுக்கள், தனியார் @காசாலைகளுக்கு வழங்கப்பட்டன.
பசுக்கள் மாயம்: இந்த பசுக்களின் நிலை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தணிக்கை செ#யப்பட்டது. இதில், தனியார் @காசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 மாடுகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவை என்னவாயின என்பது குறித்து, எவ்வித ஆவணங்களும் இல்லை. மேலும், மற்ற முக்கிய கோவில்களுக்கு தரப்பட்ட, 700 பசுக்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படுவதாக தெரிகிறது.சம்மந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம், கேட்ட போது, அவர்களிடமும் பதில் இல்லை. எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமிக்கு சொந்தமான பசுக்கள், விற்பனை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விதிமுறை மீறல்: திருச்செந்தூர் கோவில் நிர்வாகம், விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்படாத பசுச்சாலைகளுக்கு மட்டுமே, பசுக்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, அங்கீகரிக்கப்படாத பசுச்சாலைகளுக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களை வழங்கியதாக, தற்போது கூறப்படுகிறது.மேலும், தனியார் பசுச்சாலைகளுக்கு, வழங்கப்பட்ட பசுக்களை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ள போதும், கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொள்ளவில்லை. இதனால், பசுக்கள் மாயமானது குறித்து, அதிகாரிகளுக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பசுச்சாலைகளின் பெயர் வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை இறப்பு சான்று பெற்றது மீதம் இருப்பு
பசுக்கள் பாதுகாப்பு சங்கம் 2389 25 1364
ஜெயேந்திர பசுக்கள் சரணாலயம் 573 - 573
ராஜேஸ்வரி பசுக்கள் சங்கம் 1349 45 1304
குமரன் சாலை 494 - 494
லட்சுமி கோசாலை 100 - 1 00
கோபாலா கோசாலை 150 - 150 -
மாஸ் டிரஸ்ட் 292 - 292
கோமாதா டிரஸ்ட் 42 - 42.