Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நலிவடைந்த கோவில்களுக்கு ... திண்டுக்கல்லில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள் திண்டுக்கல்லில் பூக்குழி இறங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் டிச.31ல் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்; ஜன. 10ல் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் டிச.31ல் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்; ஜன. 10ல் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

20 டிச
2024
05:12

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யயன உற்ஸவம் பகல்பத்து உற்ஸவத்துடன் டிச.31 ல் துவங்குகிறது. ஜன 10 நள்ளிரவில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில்  அத்யயன உற்ஸவம் 20 நாட்கள் நடைபெறும்.  முதலில் பகல் பத்து உற்ஸவம் டிச.31ல் துவங்குகிறது. அன்று மாலை பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் ஆண்டாள் சன்னதி எழுந்தருளுகிறார். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து பெருமாளுக்கு காப்புக் கட்டி உற்ஸவம் துவங்கும். தொடர்ந்து பூஜை, ஆராதனைகள் நடந்து பெரியாழ்வாருக்கு மரியாதை நடைபெறும். பின்னர் தினசரி காலையில்  பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், மாலையில் திருவாராதனம், பெரியாழ்வாருக்கு மரியாதையும் நடைபெறும். பகல்பத்து நிறைவன்று  ஜன.9ல் திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் அருளி, ஆழ்வார் திருவடி தொழுதல் நடைபெறும். பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பெருமாள் தென்னமரத்து வீதி எழுந்தருளி பகல் பத்து உற்ஸவம் நிறைவடையும்.


ஜன.10 ல் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு காலையில் சயன கோலத்திலும், மாலையில் ராஜாங்க அலங்காரத்தில் அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிப்பர். பின்னர் இரவில் ஏகாந்த அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியருடன் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி வேத விண்ணப்பம் செய்யப்படும். ஆழ்வாருக்கு மரியாதை அளிக்கப்பட்டு நம்மாழ்வருக்கு காட்சி அளித்து பரம பத வாசலை கடந்து சென்று அருள்பாலிப்பர். பின்னர் முன் மண்டபம் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு மரியாதை அளிப்பார். தொடர்ந்து பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளி ராப்பத்து உற்ஸவம் துவங்கும். தினசரி பெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி சொர்க்கவாசலை கடந்து செல்வது நடைபெறும். ஜன.19 ல் ராப்பத்து உற்ஸவம் நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar