Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 37 நாட்களில் 29 லட்சம் பேர் ... சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்; ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் தரிசனம் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பெருவழிப் பாதையில் அனுமதி நேரம் அதிகரிப்பு; 7 லட்சம் பேருக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
சபரிமலை பெருவழிப் பாதையில் அனுமதி நேரம் அதிகரிப்பு; 7 லட்சம் பேருக்கு அன்னதானம்

பதிவு செய்த நாள்

23 டிச
2024
05:12

சபரிமலை; மகர விளக்கு காலத்தில் பெருவழிப்பாதையில் கூட்டம் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எருமேலியிலிருந்து அழுதை வழியாக பம்பை வரும் பெருவழிப் பாதை சபரிமலைக்கான முக்கிய பாரம்பரிய பாதையாகும். முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுக்குள் ஒற்றையடி பாதையாக இது அமைந்துள்ளது. இங்கு பயணம் செய்யும் பக்தர்கள் நடு காடுகளுக்குள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் தொடர்ந்து செல்வதற்கான நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மகர விளக்கு காலத்தில் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்பதை கணக்கில் கொண்டு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பக்தர்களை அனுமதிக்கும் நேரத்தை அதிகரித்துள்ளது. இதன்படி முக்குழியில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் காலை 7:00 முதல் மாலை 4:00 மணி வரை எனவும், அழுதையிலிருந்து அனுமதிக்கும் நேரம் காலை 7:00 முதல் மதியம் 3:30 வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் புல் மேடு பாதையில் சத்திரத்திலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம் காலை 7:00 முதல் பகல் 1:00 மணி வரை என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சபரிமலை மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் இன்று வரை 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு கூறியுள்ளது. அன்னதான நன்கொடையாக மட்டும் 2.18 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பந்தளம், எருமேலி , நிலக்கல் கோயில்களில் இந்த ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேரடியாக அரவணை அப்பம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில் மட்டும் தேவசம்போர்டுக்கு 2.32 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 18 படிகளில் ஏற, பக்தர்கள் 10 மணி நேரம் ... மேலும்
 
temple news
சபரிமலை: பக்தர்களின் நீண்ட வரிசை காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் கலந்து கொள்ள முடியாத ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பம்பையில் பக்தர்கள் தடுத்து ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் பம்பையில் இருந்து 900 அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று மாநில ... மேலும்
 
temple news
மூணாறு; சத்திரத்தில் ஐய்யப்ப பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் கை எளிமை படுத்தும் வகையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar