Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலைக்கு அலங்கரித்து வரும் ... சபரிமலை பெருவழிப் பாதையில் அனுமதி நேரம் அதிகரிப்பு; 7 லட்சம் பேருக்கு அன்னதானம் சபரிமலை பெருவழிப் பாதையில் அனுமதி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 37 நாட்களில் 29 லட்சம் பேர் தரிசனம்; கடந்த ஆண்டைவிட 4.50 லட்சம் அதிகம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 37 நாட்களில் 29 லட்சம் பேர் தரிசனம்;  கடந்த ஆண்டைவிட 4.50 லட்சம் அதிகம்

பதிவு செய்த நாள்

23 டிச
2024
11:12

சபரிமலை; சபரிமலையில் நடப்பு மண்டல காலத்தின் 37 நாட்களில் 29 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட நான்கரை லட்சம் அதிகம்.


சபரிமலையில் மண்டல கால சீசனுக்காக நவ., 15 மாலை 5:00 க்கு நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு சீசனில் பக்தர்கள் காடுகளிலும், ரோடுகளிலும், சபரிமலை பாதைகளிலும் 24 முதல் 36 மணி நேரம் வரை காத்திருந்து சிரமப்பட்டனர். இதற்கு பல்வேறு மாநில அரசுகளும் கண்டனம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டது. குறிப்பாக 18 படிகளில் பக்தர்களை ஏற்றுவது வேகப்படுத்தப்பட்டது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டனர். அதுபோல ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இதனால் நடப்பு சீசனில் பெரிய அளவிலான புகார்கள் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டிச., 21 வரை 28 லட்சத்து 93 ஆயிரத்து 210 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட நான்கரை லட்சம் அதிகம். ஸ்பாட் புக்கிங் என்ற உடனடி முன்பதிவு மூலம் 5 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். புல் மேடு பாதை வழியாக 60 ஆயிரத்து 304 பக்தர்கள் வந்துள்ளனர். இந்த சீசனில் 19 மற்றும் 20 தேதிகளில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பக்தர்கள் தினசரி வந்துள்ளனர். 19, 20, 21 தேதிகளில் ஸ்பாட் புக்கிங் மூலம் தினமும் சராசரியாக 22,000 பேர் வந்தனர். ஒரு லட்சம் பக்தர்கள் வந்த நிலையில் பெரிய அளவுக்கு காத்திருப்பு இல்லாமல் தரிசனம் நடத்தி திரும்பினார். இது தேவசம் போர்டின் தகுந்த முன்னேற்பாடு மற்றும் கேரள அரசு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; எருமேலியில் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர் குழுவின் பேட்டை துள்ளல் நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வருகை தாறுமாறானதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர சங்கரம பூஜை 14 - ம் தேதி மாலை 3.08 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை மண்டல மகர விளக்கு சீசனில் அரவணை பிரசாதம் தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar