Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் ... ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் நீதி வெல்லும் காமாட்சிபுரம் ஆதீனம் கருத்து! ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் நீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்துாணும்.. தினமலர் நாளிதழும்..!
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தீபத்துாணும்.. தினமலர் நாளிதழும்..!

பதிவு செய்த நாள்

07 ஜன
2026
11:01

மதுரை; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், ‘அது நில அளவைக்கல்’ என தி.மு.க., எம்.பி.,யும், சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி கூறினார். இதே கருத்தை தமிழக அரசும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது நீதிபதிகளிடம் தெரிவித்தது.


அப்போது, ‘நில அளவை கல்’ என்ற ஆதாரமற்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆகம நிபுணரும், வழக்கறிஞருமான சங்கரனின் பிரத்யேக பேட்டியுடன் தினமலர் நாளிதழ், டிச.,9ல் ஒரு செய்தி வெளியிட்டது. அதில் தீபத்துாண் குறித்து தமிழக தொல்லியல் துறை 1981ல் வெளியிட்ட நுாலில் குன்றத்து கோயில் என குறிப்பிடப்பட்ட பகுதியில் சொல்லப்பட்டிருந்ததை தினமலர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியது. இதன்மூலம் தி.மு.க.,வினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியது போல் அது நிலஅளவைக்கல் அல்ல, தீபத்துாண்தான் என்று வலியுறுத்தப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது ஹிந்து அமைப்பினர் இதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.


இதன்பிறகும் நில அளவைக்கல்தான் என்பதில் தமிழக அரசு உறுதியாக நின்றது. இதனால் தினமலர் நாளிதழ் அதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அப்போது உயர்நீதிமன்ற மதுரை வழக்கறிஞர் தங்கபாண்டியன், நிலஅளவைக்கல் எப்படி இருக்கும் என ஆய்வு செய்தது குறித்து டிச., 10ல் ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண்தான். அரசு பதிவேடுகளில் நில அளவைக்கல் குறித்த தகவல் இல்லை’ என தலைப்பிட்டு தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியில் நிலஅளவைக்கல் எப்படி இருக்கும்; தீபத்துாண் எப்படி இருக்கும்-, வேறுபாடு என்ன என்று விரிவாக சுட்டிக் காட்டப்பட்டது. இதன்பிறகு அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு ‘அது நிலஅளவைக்கல் அல்ல’ என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்படி தீபத்துாணை, ‘தீபத்துாண் தான்’ என ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது தினமலர். தற்போது உயர்நீதிமன்றமும் அதில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு பக்தர்களின் மனதில் பால்வார்த்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar