Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து ... சபரிமலையில் மண்டல காலம் நிறைவு; மகர விளக்கு பூஜைக்கு டிச., 30ல் நடை திறப்பு சபரிமலையில் மண்டல காலம் நிறைவு; மகர ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 41 நாட்கள் நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறைவு; 108 கலசங்களுடன் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 41 நாட்கள் நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறைவு; 108 கலசங்களுடன் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 டிச
2024
03:12

சபரிமலை; சபரிமலையில் இன்று நடைபெற்ற மண்டல பூஜையுடன் 41 நாட்கள் நடைபெற்ற மண்டலகாலம் நிறைவுபெற்று நடை அடைக்கப்பட்டது. இனி மகர விளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறது.

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மண்டல காலத்தின் நிறைவாக இன்று மதியம் 12:20 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக 11 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 கலசாபிஷேகமும், களபாபிஷேகமும் நடைபெற்றது. பூஜித்து நிறைக்கப்பட்ட வெள்ளி சந்தன குடத்தை மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார். தொடர்ந்து அந்த சந்தனம் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க அங்கி மற்றும் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். இதை தொடர்ந்து சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது. இனி மகர விளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30 மாலை 5:0 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. 31 அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடங்கும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar