Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி செவலபுரை செல்லியம்மன் ... சாணார்பட்டி அருகே அமாவாசை மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் கோயில் உண்டியலில் அலைபேசிகள், அதிகாரிகள் விசாரணை
எழுத்தின் அளவு:
மடப்புரம் கோயில் உண்டியலில் அலைபேசிகள், அதிகாரிகள் விசாரணை

பதிவு செய்த நாள்

31 டிச
2024
05:12

திருப்புவனம்; திருப்புவனம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பின் போது பணம், நகைகளுடன் அலைபேசிகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை செலுத்த பத்து நிரந்தர உண்டியல்களும், ஒரு கோசாலை உண்டியலும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும். நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கணபதிமுருகன்( மடப்புரம்), ஞானசேகரன்(ராமநாதபுரம்), இளங்கோ (இருக்கன்குடி) தலைமையில் தன்னார்வலர்கள் , கோயில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ஒரு ஆண்ட்ராய்டு , இரண்டு சாதாரண அலைபேசிகளும், ஒரு வாட்ச்சும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.


(பொதுவாக உண்டியல்களில் நேர்த்திகடனாக அலைபேசிகள் செலுத்தப்படுவது இல்லை. நேற்று உண்டியலில் கிடந்த அலைபேசிகள் மிகவும் பழைய மாடலாக உள்ளதால் திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டவையா என விசாரணை நடந்து வருகிறது. ) உண்டியலில் 31 லட்சத்து67 ஆயிரத்து 138 ரூபாயும், பலமாற்று பொன் இனங்கள் 156 கிராமும், வெள்ளி 173 கிராமும் கிடைத்தன. ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar