Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சொர்க்கவாசல் காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2025
07:01

ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


108 திவ்ய தேசங்களில் முக்கிய திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 7.05 மணிக்கு பரம்பத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பெரிய பெருமாள்,ஆண்டாள்,ரெங்கமன்னார் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் காலை 7.05 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்.பின்னர் மாடவீதி,கந்தாடை வீதி வழியாக ராப்பத்து மண்டபத்திற்கு ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள் எழுந்தருளினர். அங்கு மங்களாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல், அரையர் வியாக்கியானம், சேவா காலம் மற்றும் கோஷ்டி நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்தானம் செல்கின்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா செயல் அலுவலர் சக்கரையம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar