Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊருக்கு உதவிய கேரள சித்தருக்கு ... பழமை வாய்ந்த கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா பழமை வாய்ந்த கூடலழகிய பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் இரவு 11:15 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசல்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் இரவு 11:15 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசல்

பதிவு செய்த நாள்

11 ஜன
2025
01:01

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆழ்வாருக்கு பெருமாள் காட்சியளித்ததை பக்தர்கள் தரிசித்தனர்.


சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஏகாதசியன்று தட்சிணாயனம் புண்ய காலத்தில் சயனித்து உத்தராயண புண்ய காலத்தில் எழுந்தருளி பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளுவது வழக்கம். இதனால் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சயன,அமர்ந்த,நின்ற திருக்கோலங்களில் அருள்பாலிப்பார்.நேற்று இக்கோயிலின் மூலக்கோயிலான  கோமடம் சீனிவாசப் பெருமாள் கோயில் அர்ச்சகர் மூப்பால் இறந்ததை அடுத்து, இன்று சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் காலையில் பட்டாச்சார்யர்களால் பிராயச்சித்த ஹோமம் நடத்தப்பட்டது. இதனால் பெருமாள் சயன,அமர்ந்த கோலத்தில் எழந்தருளல் நடைபெறவில்லை.


ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு  நேற்று காலை 11:30 மணிக்கு மூலவர் சன்னதியில் உற்ஸவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதல் நடந்தது. தொடர்ந்து நித்ய பூஜைகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் உற்ஸவர் எழு்நதருளி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நின்ற கோலத்தில் ஏகாந்த சேவையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்தார். இரவு 10:15 மணிக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் புறப்பட்டு தாயார் சன்னதி எழுந்தருளி காட்சியளித்தார். பின்னர் ஆண்டாள் சன்னதி, பரமபத வாசல் அருகில் எழுந்தருளி வேதம் விண்ணப்பித்தல் நடந்தது. தொடர்ந்து ஆண்டாளுக்கு காட்சி அளித்தார்  பின்னர் சேனை முதல்வர் ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 11:15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். திரளாக பக்தர்கள் கூடி சொர்க்கவாசல் எழுந்தருளலை தரிசித்தனர். தொடர்ந்து பெருமாள் திருமாமணி மண்டபம் எழுந்தருளி பத்தி உலாத்துதல் நடந்தது.  பின்னர் பெருமாள்  தென்னமரத்து வீதி புறப்பாடு துவங்கியது. அடுத்து கல்மண்டபத்தில் திருவந்திகாப்பு நடந்து தாயார் சன்னதி எழுந்தருளினார். பின்னர் ராப்பத்து உற்ஸவத்திற்கு காப்பு கட்டி உற்ஸவம் துவங்கியது. அதிகாலை 1:30 மணிக்கு பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar