Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊருக்கு உதவிய கேரள சித்தருக்கு ... பழமை வாய்ந்த கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா பழமை வாய்ந்த கூடலழகிய பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் இரவு 11:15 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசல்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் இரவு 11:15 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசல்

பதிவு செய்த நாள்

11 ஜன
2025
01:01

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆழ்வாருக்கு பெருமாள் காட்சியளித்ததை பக்தர்கள் தரிசித்தனர்.


சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஏகாதசியன்று தட்சிணாயனம் புண்ய காலத்தில் சயனித்து உத்தராயண புண்ய காலத்தில் எழுந்தருளி பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளுவது வழக்கம். இதனால் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சயன,அமர்ந்த,நின்ற திருக்கோலங்களில் அருள்பாலிப்பார்.நேற்று இக்கோயிலின் மூலக்கோயிலான  கோமடம் சீனிவாசப் பெருமாள் கோயில் அர்ச்சகர் மூப்பால் இறந்ததை அடுத்து, இன்று சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் காலையில் பட்டாச்சார்யர்களால் பிராயச்சித்த ஹோமம் நடத்தப்பட்டது. இதனால் பெருமாள் சயன,அமர்ந்த கோலத்தில் எழந்தருளல் நடைபெறவில்லை.


ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு  நேற்று காலை 11:30 மணிக்கு மூலவர் சன்னதியில் உற்ஸவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதல் நடந்தது. தொடர்ந்து நித்ய பூஜைகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் உற்ஸவர் எழு்நதருளி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நின்ற கோலத்தில் ஏகாந்த சேவையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்தார். இரவு 10:15 மணிக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் புறப்பட்டு தாயார் சன்னதி எழுந்தருளி காட்சியளித்தார். பின்னர் ஆண்டாள் சன்னதி, பரமபத வாசல் அருகில் எழுந்தருளி வேதம் விண்ணப்பித்தல் நடந்தது. தொடர்ந்து ஆண்டாளுக்கு காட்சி அளித்தார்  பின்னர் சேனை முதல்வர் ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 11:15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். திரளாக பக்தர்கள் கூடி சொர்க்கவாசல் எழுந்தருளலை தரிசித்தனர். தொடர்ந்து பெருமாள் திருமாமணி மண்டபம் எழுந்தருளி பத்தி உலாத்துதல் நடந்தது.  பின்னர் பெருமாள்  தென்னமரத்து வீதி புறப்பாடு துவங்கியது. அடுத்து கல்மண்டபத்தில் திருவந்திகாப்பு நடந்து தாயார் சன்னதி எழுந்தருளினார். பின்னர் ராப்பத்து உற்ஸவத்திற்கு காப்பு கட்டி உற்ஸவம் துவங்கியது. அதிகாலை 1:30 மணிக்கு பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி பிரமோற்ஸவ விழா ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar