Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூலோக வைகுண்டத்தில் நம்மாழ்வார் ... பிப்.11ல் மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா; முகூர்த்த கால் ஊன்றப்பட்டது பிப்.11ல் மீனாட்சி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் முருகன் கோவிலில் ராஜகோபுர கலசங்கள் நிலைநிறுத்தம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் முருகன் கோவிலில் ராஜகோபுர கலசங்கள் நிலைநிறுத்தம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
10:01

துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எச்.சி.எல்., நிறுவனம் சார்பில் 200 கோடி மற்றும் தமிழக அரசு 100 கோடி என, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம் வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. 137 அடி உயரமும், ஒன்பது நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. கோபுரத்தின் கீழ்த்தள பகுதிகள், துாண்கள் புதுப்பிக்கும் பணிகளும், ராஜகோபுரத்தில் உள்ள ஒன்பது கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டன. இதற்காக கோபுரத்தில் இருந்த கலசங்கள் கீழே கொண்டு வரப்பட்டு, அவற்றைப் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அவற்றுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின், ஒன்பது கலசங்களும் கோபுர உச்சியில் நிலை நிறுத்தப்பட்டன. கும்பாபிஷேகம் நாளில் அந்த கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar