Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழவந்தாங்கல் ஐயனாரப்பன் கோவிலில் ... ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா முகூர்த்தகால் நடுவிழா ஸ்ரீவில்லிபுத்துார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரளிக்காடு, குருந்தமலை கோயிலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பரளிக்காடு, குருந்தமலை கோயிலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
11:01

மேட்டுப்பாளையம்;  காரமடை அருகே பரளிக்காடு, குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.


தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று காரமடை அருகே உள்ள பரளிக்காடு மற்றும் பூச்சமரத்தூரில், சூழல் சுற்றுலா மையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் காரமடை குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.


பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். பூச்சமரத்தூர் பரளிக்காடுக்கு இடையே உள்ள ஆற்று பகுதியில் பள்ளி குழந்தைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் ஆற்றினை கடந்த செல்ல, அதற்கு பாலம் அமைக்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் கடம்பன் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் மின்சார வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில், கோவை சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, ஹிந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ரமேஷ், குருந்தமலை அறங்காவலர் குழு தலைவர் மோகன பிரியா, செயல் அலுவலர் வனிதா, சுரேந்திரன், ராயப்பன், அமுதவேணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar