Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுக்ரீஸ்வரர் கோவில் திருப்பணி ... அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்; வேதனையில் பக்தர்கள் அருப்புக்கோட்டை கோவிலில் திதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல நூறு ஆண்டுகளாக குழிக்குள் உள்ள மூடி அம்மனை வழிபட்டு காதணி விழா நடத்தும் நூதனம்
எழுத்தின் அளவு:
பல நூறு ஆண்டுகளாக குழிக்குள் உள்ள மூடி அம்மனை வழிபட்டு காதணி விழா நடத்தும் நூதனம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
11:01

பல்லடம்; பல்லடம் அருகே, குழிக்குள் உள்ள மூடி அம்மனை வழிபட்டு, காதணி விழாவை கிராம மக்கள் நூதன முறையில் கொண்டாடி வருகின்றனர்.


பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை, சங்கோதிபாளையம் கிராமத்தில் வசிக்கும் கொங்கு இனத்தின் ஒரு பிரிவான முழுக்காத குலத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளின் காதணி விழாவை  நூதன முறையில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், குழந்தைகளின் காதணி விழாவுக்கு முன்பாக, இங்குள்ள மூடி அம்மனை வழிபடுவது வழக்கம். பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. முன்னதாக, காதணி விழா செய்பவர்கள், குழிக்குள் உள்ள அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தேங்காய், பழம், பூ மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் பொங்கல் படையல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவர். இந்த சடங்கின் மூலம் சீர் விழா நல்லபடியாக நடக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து, சீர்‌ செய்பவர்கள், நவதானியங்களை குழிக்குள் இட்ட பின், அம்மனை வழிபட்டு விட்டு, குழியை மூடி‌ விடுவர். அடுத்து வேறு யாரேனும் சீர் செய்யும் போதுதான் மீண்டும் மூடியை திறந்து அம்மனுக்கு வழிபாடு செய்வார்கள். அதுவரை, குழி மூடப்பட்டுதான் இருக்கும். அம்மன், குழிக்குள் வைத்து மூடப்படுவதால், இந்த அம்மனுக்கு மூடி அம்மன் என்று பெயர். கடந்த காலங்களில், ஏழு நாட்கள் வரை மூடி அம்மனுக்கு வழிபாடுகள் விமரிசையாக நடக்கும். தற்போது, எங்களுக்கு தெரிந்த வகையில் வழிபாடு செய்து வருகிறோம் என்றனர். முன்னதாக, மூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின், வழக்கம்போல் குழி மூடப்பட்டது. அனைவரும் பிரசாதம் சாப்பிட்டு வீட்டுக்கு திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்த ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்ததை ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற உள்ள பௌர்ணமி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar