ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2025 10:02
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 3:30 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6:30 மணிக்கு, மகர லக்னத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெறும் உற்சவ நாட்களில், பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா நடைபெறும். வரும் 10ம் தேதி, முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் நடைபெறும்.