Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை ... வசந்த பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில்  வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வசந்த பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வசந்த பஞ்சமி; மகா கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு
எழுத்தின் அளவு:
வசந்த பஞ்சமி; மகா கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு

பதிவு செய்த நாள்

03 பிப்
2025
10:02

லக்னோ: மஹா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி தினத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது. வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 30 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் மஹா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று (பிப்.,03) வசந்த பஞ்சமி தினம். வசந்த கால வருகையின் ஒரு மங்களகரமான தினமாக வசந்த பஞ்சமி உள்ளது, மேலும் இதன் ஆன்மீக முக்கியத்துவம் மகத்தானது. இந்த புனித நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் அமிர்த ஸ்நானம் எடுத்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கங்கை மாதாவின் அமிர்தம் போன்ற நீரில் நீராடிய துறவிகள் மற்றும் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன. கூட்டத்தினரை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நெரிசல், அசம்பாவிதத்தை தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் உ.பி., அரசு செய்துள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar