Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க ... புதுச்சேரி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் புதுச்சேரி ஆஞ்சநேயர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி காந்தள் மூவுலகரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஊட்டி காந்தள் மூவுலகரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2025
01:02

ஊட்டி; ஊட்டி காந்தள் பழமை வாய்ந்த ஸ்ரீ மூவுலக அரிசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.


இக்கோவில் இருக்கும் இடத்திற்கு வடக்கு திசையில், ஒரு கிணறு இருந்தது. பழங்குடிகள் அக்கிணற்றில் தண்ணீர் எடுக்க செல்லும் நேரத்தில், ஒரு பெண் துணைக்கு வந்து, தற்போது கோவிலின் கர்பகிரஹம் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்றுள்ளார்.  தங்களை தொடர்ந்து பாதுகாத்து வந்த பெண்ணை மக்கள் தாய்போல கருதி, அம்மன் கோவில் கட்டி வழிப்பட்டுள்ளனர். அந்த வழிபாட்டை, அப்பகுதியில் வாழ்ந்த ‘கசவர்’ என்ற பழங்குடிகள் நடத்தி வந்துள்ளனர். கோவில் கட்ட உதவிய ஆங்கிலேயர் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் காலத்தில், முதல் கல்பங்களா கட்டும் போது,  காந்தள் வழியாக மைசூருக்கு குதிரையில் சென்ற ஜெனரல்வாப்சர் என்பவர் மூலம், இந்த கோவில் குறித்து அறிந்த சல்லிவன், இதனை புனரமைக்க தேவையான மரம், கற்களை பழங்குடியினரிடம் கொடுத்துள்ளார்.  அதன்பின், 1882ல் மீண்டும் கோவில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது நடந்த ஆய்வில் ‘பழங்குடிகள் கட்டிய இந்த கோவில், 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்,’ என, கூறப்பட்டது. 1940ல் கட்டப்பட்ட ராஜகோபுரம் இந்த கோவிலில் கடந்த, 1940 ஆண்டு, 500 ரூபாய் மதிப்பில் ராஜாகோபுரம் கட்டப்பட்டு,   மஹா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 1972ம் ஆண்டு கோவில், அறநிலையத்துறை வசம் சென்றபிறகு கும்பாபிஷேகம் நடந்தது.  மீண்டும், 1992 மற்றும் 2006ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, அறநிலையத்துறை சார்பில், கடந்த 2ம் தேதி மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar