Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் ... ஊட்டி காந்தள் மூவுலகரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஊட்டி காந்தள் மூவுலகரசி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க புறப்பட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க புறப்பட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 பிப்
2025
01:02

காரைக்குடி; தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று நகர்வலம் வந்தனர். தைப்பூசத் திருவிழாவிற்கு நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழநிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக சென்று வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாகவே திரும்புவர். காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக, குன்றக்குடி வந்தடைவர்.


குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து பிப்.5ம் தேதி பாதயாத்திரையை தொடங்குகின்றனர். பிப்.13ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்வு நடைபெறும். இதனையொட்டி நேற்று காரைக்குடியில் நகரத்தார் காவடிகள் நகர்வலம் வந்தனர். நகரச்சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டு, முத்து மாரியம்மன் கோயில் செக்காலை சிவன் கோயில் டி.டி நகர் விநாயகர் கோவில், கொப்புடைய நாயகி அம்மன் கோயிலை வந்தடைந்து இரவு சிலம்பணி பிள்ளையார் கோயிலில் தங்கி இன்று காலை குன்றக்குடிக்கு காவடிகள் புறப்படுகின்றன.


* தேவகோட்டையில் இருந்து பழநிக்கு தைப்பூசத் திருவிழாவிற்கு காவடிகள் , பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுவர். நேற்று முன்தினம் நகர பள்ளிக்கூடம் முருகன்சந்நிதியில் நகரத்தார் காவடிகள் கட்டப்பட்டு பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று காலையில் நகர பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்பட்டு தலைமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சென்று அங்கிருந்து அனைத்து காவடிகளும் முக்கிய வீதிகளின் வழியாக நகர் வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் தங்கினர். பல நூற்றாண்டுகளுக்கு முன் பழநி தைப்பூச விழாவிற்கு முதன்முதலாக காவடி கட்டி பாதயாத்திரை துவக்கிய அழகிய சுந்தர வேலாயுத தண்டாயுதபாணி கோயிலில் இருந்து முதலியார் பாரம்பரிய காவடி கட்டி பூஜைக்கு பின் காவடி நகர்வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் வந்து தங்கினர். இன்று காலை 6:00 மணிக்கு புறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் அறப்போராட்டத்திற்காக மதுரை, பழங்காநத்தத்தில் முருக ... மேலும்
 
temple news
சென்னை; சூரியனின் வடதிசையில், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பயணிக்கும் மாதங்கள், உத்திராயண புண்ணிய காலம். ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் இன்று (பிப்.,4) ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் தை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar