அவிநாசி செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2025 11:02
அவிநாசி; அவிநாசி கங்கவர் வீதியில் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.
அவிநாசி கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பின்னர் ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம்,மகா அலங்காரம்,தரிசனம் ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.