மேலூர்; செம்மினிபட்டி ஆண்டி பாலகர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப். 2 காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வேல் குத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கியும், குழந்தை வரம் பெற்றவர்கள் கரும்பினாலான தொட்டியில் கட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.பிறகு மந்தையிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அதற்கு முன்பாக சிவன் கோயிலில் இருந்து சாமியாடி கொண்டு வந்த பாலை கொண்டு வேலுக்கு பாலாபிஷேகமும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய காய்கறிகளை கொண்டு அன்னதானமும் நடந்தது. இக் கோயிலில் முருகன் சிலைக்கு பதிலாக மேல் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவில் கீழையூர், கீழவளவு, செம்மினிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.