Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டி பாலகர் கோயிலில் பூக்குழி ... பழநிக்கு படையெடுக்கும் பக்தர்கள்; இன்று மட்டும் 3 லட்சத்தை கடந்தது பழநிக்கு படையெடுக்கும் பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சண்முகநாதன் கோயிலில் தைப்பூச திருவிழா : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
எழுத்தின் அளவு:
சண்முகநாதன் கோயிலில் தைப்பூச திருவிழா : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
03:02

கம்பம்; ராயப்பன்பட்டி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சண்முகநாதன் கோவில் தைப்பூசத் திருவிழா இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர்.


ராயப்பன்பட்டி மலை அடிவாரத்தில், அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது சண்முகநாதன் கோவில்.அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கோயிலில் பங்குனி உத்திரம், தைப்பூச நாட்களில் அதிக பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்வது வழக்கம், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு கம்பம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதல் கூட்டம் வந்து கொண்டிருந்தது. சர்வ அலங்காரத்தில் முருகள் எழுந்தருளினார். முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால் தயிர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் என பல பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் கமிட்டி சார்பாக நடைபெற்ற அன்னதானத்தில் ஆயிரக்கணக்கில் பத்தர்கள் பங்கேற்றனர். விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கம்பம் கே.ஆர்.ஜெயப்பாண்டியன், சிவனடியார் முருகன் சுவாமிகள், அர்ச்சகர் கணபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு காமயகவுண்டன்பட்டு, அணைப்பட்டி போன்ற ஊர்களுக்கு சிறப்பு பஸ் விடப்பட்டது. 


கம்பம் : கம்பம் வேலப்பர் கோயிலில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் வழங்கிய பால் அண்டாக்கங்களில் நிரப்பப்பட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தரிசிக்க திரளாக பக்தர்கள் குவிந்தனர். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயில்களிலும் தைப்பூச சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் விழாவை முன்னிட்டு மயான பூஜை நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பிரயாகராஜ் ; உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோத்சவத்திற்கான ... மேலும்
 
temple news
அவிநாசி; தைப்பூச திருநாளை முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar